மதுரையில் இதுவரை இல்லாத அளவு.. ஒரே நாளில் 157 பேருக்கு கொரோனா!

Default Image

மதுரை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதித்தோரின் எண்ணிக்கை 849 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இன்று ஒரே நாளில் மதுரையில் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அங்கு மொத்தமாக பாதித்தோரின் எண்ணிக்கை 849 ஆக அதிகரித்துள்ளது. அங்கு மொத்தமாக 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 389 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினார். மேலும், கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துப் வரும் சூழலில், அங்கு நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தவிர்த்து, திருவாரூரில் 139 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 126 பேருக்கும், திருவண்ணாமலையில் 120 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்