பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர் வீரமரணம்!

Default Image

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர் வீரமரணம்.

பாகிஸ்தான் ராணுவம் எல்லைப்பகுதியில் தொடர்ந்து, அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் புஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களின் பல்வேறு செக்டார்களில் பாகிஸ்தான் ராணுவம் இன்று தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தாக்குதலில் இன்று, இந்தியா தரப்பில் ஹவில்தார் தீபக் கார்கி என்ற ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். ஏற்கனவே, லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தததையடுத்து, மீண்டும் இந்திய வீரர் வீரமரணம் அடைந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்