தலைநகரில் தாண்டவமாடும் கொரோனா.! ஒரே நாளில் 3000 பேருக்கு தொற்று உறுதி.!

Default Image

டெல்லியில் இன்று ஒரே நாளில் 3000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 59,746ஆக உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாகிகொண்டே வருகிறது. இதுவரை அங்கு 59 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் 3000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 59,746ஆக உள்ளது. அதேபோல இன்று மட்டுமே 63 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 2175ஆக உயர்ந்தது.

இதில் சிறிய நற்செய்தி என்னவென்றால் 1719 பேர் இன்று கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரையில் 33,013  பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்துவருவதால் அதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்