எந்த சாணக்கியனாலும் வீழ்ச்சி ஆரம்பித்து விட்டால் தடுக்க முடியாது!

Default Image

சிவசேனா கட்சி, 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு 110 இடங்கள் மட்டும் தான் கிடைக்கும் என  விமர்சனம் செய்துள்ளது.

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான  சாம்னாவில் வெளியாகி உள்ள தலையங்கத்தில் கோரக்பூர், புல்பூர் இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக முகாமில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நண்பர்களை கைவிட்டு, பொய்யான பாதையில் நடப்பவர்களுக்கு தோல்வி நிச்சயம் என குறிப்பிட்டுள்ள சிவசேனா, வீழ்ச்சி ஆரம்பித்து விட்டால் எந்த சாணக்கியனாலும் அதை தடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச இடைதேர்தலில் கிடைத்த தோல்வி, பாஜகவின் அகங்காரத்திற்கு கிடைத்தது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தலில் கிடைத்த வெற்றியை கொண்டாட முடியாத நிலையில் தற்போது பாஜக உள்ளதாகவும் சிவசேனா விமர்சித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்