பாஜகவுடன் கூட்டணியா ?நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் விளக்கம் …

Default Image

நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், பா.ஜ.க.வுடன் தற்போதைக்கு கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று  தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டில் ஜனசேனா என்ற கட்சியை தொடங்கிய பவன் கல்யாண், அப்போது நடைபெற்ற தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக தெலுங்கு தேசம், பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்தார். இதனால் பா.ஜ.க. சார்பில் களமிறக்கப்படும் தலைவராக பவன் கல்யாணை ஆந்திர மக்கள் கருதி வருவதாக கூறப்படுகிறது.

 

இதுகுறித்து பேட்டி அளித்த அவர், ஆந்திராவுக்கு சிறப்பு நிதி, சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களால் ஆந்திராவில் பா.ஜ.க. மீதான மக்கள் மனநிலை மொத்தமாக எதிர்மறையாகி விட்டதாக தெரிவித்தார். இந்தச் சூழலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தற்போதைக்கு சாத்தியமே இல்லை என்றும் பவன் கல்யாண் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்