மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன்

Default Image

மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் நாடு முழுவதும் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் 10 வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனிடையே காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படுவதால் தனியார் பள்ளிகள் குளறுபடியில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், 10ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்