இன்று முதல் சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களுக்கு ஊரடங்கு.!

Default Image

இன்று முதல் சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய  மாவட்டங்களில் பொதுமுடக்கம் அமல்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தான் கொரோனா தாக்கம் தினமும்  அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் தாக்கம் அதிகரித்து செல்கிறது.

இதனால், சென்னையைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூா் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை  12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி  அறிவித்தார்.

இந்நிலையில், இன்று முதல் இந்த நான்கு மாவட்டங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்