நிழல் நிஜமாகிவிடாது என்பதை தமிழக அரசு உணர வேண்டும் – ஸ்டாலின்

Default Image

நிழல் நிஜமாகிவிடாது என்பதை தமிழக அரசு உணர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில்,  இணையவழிக் கல்வி முறை வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை, நிழல் நிஜமாகிவிடாது.மாணவர்களிடையே பாகுபாட்டை உண்டாக்கி மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பாழடித்துவிடக் கூடாது.

அடிப்படை உட்கட்டமைப்பே இல்லாத நேரத்தில், இணையவழிக் கல்வி ஆபத்தானது .மாணவர்களுக்கு அரசு அறிவித்த கையடக்க மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை.இணையவழிக் கல்வி மாணவர்களுக்குத் தேவையில்லாத மன அழுத்தத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்