எம்.பி.பி.எஸ். அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு: 4,018 இடங்கள் நிரம்பின

Default Image

டெல்லி : எம்.பி.பி.எஸ்., பி.டிஎஸ். படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதற்கட்டக் கலந்தாய்வின் முடிவில் 4,018 இடங்கள் நிரம்பியுள்ளன.
நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 15 சதவீத எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டிஎஸ். இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 456 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் 30 பிடிஎஸ் இடங்கள் உள்பட நாடு முழுவதும் சுமார் 4,100 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்கான முதற்கட்ட கலந்தாய்வு இணையதளத்தின் மூலம் ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.
கலந்தாய்வின் முடிவில் 4,018 எம்.பி.பி. எஸ்., பி.டிஎஸ். இடங்கள் நிரம்பியுள்ளன. கலந்தாய்வு முடிவுகள் www.mcc.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 
முதற்கட்ட கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவர்கள் ஜூலை 16 முதல் 22}ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட கல்லூரிகளில் சேர வேண்டும். ஜூலை 22}ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட கல்லூரியில் சேராத பட்சத்தில், அந்த இடங்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சேர்க்கப்படும்.
2}ஆம் கட்ட கலந்தாய்வு: அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 5}ஆம் தேதி முதல் 7}ஆம் தேதி வரை நடைபெறும். இதற்கான முடிவுகள் ஆகஸ்ட் 8}ஆம் தேதி வெளியிடப்படும். 2}ஆம் கட்ட கலந்தாய்வில் இடம் கிடைத்தவர்கள் அந்தந்தக் கல்லூரிகளில் ஆகஸ்ட் 9 முதல் 16}ஆம் தேதிக்குள் சேர வேண்டும்.
அகில இந்திய ஒதுக்கீட்டில் மீதமுள்ள இடங்கள் ஆகஸ்ட் 16}ஆம் தேதி மாலை 5 மணிக்குப் பின்பு மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்