லடாக் எல்லையில் நடந்த வன்முறை.. தமிழக வீரர் பழனி வீரமரணம்!

Default Image

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு நடந்த தாக்குதலில் தமிழகம், ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

இதில் உயிரிழந்த வீரரில் ஒருவர், தமிழகத்தை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர், ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற வீரர், அந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளார். மற்ற இருவர் பற்றிய தகவல் வெளிவரவில்லை. 

இதற்கிடையில், பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். லடாக் எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், முப்படைகளின் தளபதிகள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்