நெசவாளர்களுக்கு ஒரு நற்செய்தி.! அனைவருக்கும் ரூ.2000 நிவாரண தொகை.!

Default Image

கைத்தறி மற்றும் பட்டு நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத நெசவாளர்கள் என அனைவர்க்கும் தலா 2,000 ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது அன்றாட வாழ்வில் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்து வருகிறது.

அந்த வகையில், தற்போது தற்போது நெசவாளர்களுக்கு நிவாரண உதவியை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கைத்தறி மற்றும் பட்டு நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத நெசவாளர்கள் என அனைவர்க்கும் தலா 2,000 ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான தகுதியான பதிவு செய்யாத நெசவாளர்கள் அந்தந்த மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு சென்று விண்ணப்பிக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்