வளர்ச்சிக்கான பொறியாக வடகிழக்கு மாநிலங்கள் திகழும்!

Default Image

பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலங்கள் இந்திய வளர்ச்சிக்கான பொறியாகத் திகழும் எனப்  தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலம் இம்பாலில் ஆயிரம் அங்கன்வாடி மையங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

அப்போது பேசிய அவர், மேற்கு மாநிலங்களுக்கு இணையாக வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியடையும் வரை நாடு வளர்ச்சியடைந்ததாகக் கூற முடியாது எனத் தெரிவித்தார். வடகிழக்கு மாநிலங்களில் 10 மத்திய ரிசர்வ் காவல்படை பட்டாலியன்கள் அமைக்கப்படும் என்றும், அவற்றில் இரண்டு மணிப்பூர் மாநிலத்தில் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இதன்மூலம் மணிப்பூர் மாநிலத்தில் இரண்டாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்