#Breaking: தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. ஒரே நாளில் “44 பேர் உயிரிழப்பு”

Default Image

தமிழகத்தில் கொரோனவால் இதுவரை இல்லாத அளவாக, எண்ணிக்கையாக இன்று ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக, சென்னையில் ஒரே நாளில் 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 33,244 ஆக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக, இன்று ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 382 ஆக உயர்ந்துள்ளது.

இதில் தனியார் மருத்துவமனையில் 12 பேரும், அரசு மருத்துவமனையில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50 வயதிற்கு உட்பட்ட 10 பேர் இன்று உயிரிழந்துள்ளதாகவும், வேறு நோய் இல்லாத 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்