2 கி.மீ. தொலைவிற்குள் நடந்தே தான் செல்ல வேண்டும் -தமிழக அரசு உத்தரவு

Default Image

அத்திவாசியப் பொருட்களை வாங்க 2 கி.மீ. தொலைவிற்குள் நடந்தே தான் செல்ல வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சென்னை ,செங்கல்பட்டு, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும்  காய்கறி கடைகள் , மளிகை கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட  அனுமதி அளிக்கப்படும். அதேபோல் காய்கறி ,பழங்கள் போன்றவை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.அத்திவாசியப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் ,வாகனங்களை பயன்படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே ,அதாவது 2 கி.மீ தொலைவிற்குள் மட்டும் சென்று பொருட்களை வாங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்