உலகம் முழுவதும் வெடிக்கும் போராட்டம் ! இங்கிலாந்தில் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் 100 பேர் கைது
இங்கிலாந்தில் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் ஜார்ஜ் ப்லாய்ட் எனும் கறுப்பினத்தவரை போலீசார் கழுத்தில் முட்டியை வைத்து நெரித்து கொலை செய்ததை கண்டித்து, அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்தது. அமெரிக்கா மட்டுமல்லாது உலகளவிலும் போராட்டங்கள் வெடித்த வண்ணமே உள்ளது.
இதன் ஒருபகுதியாக இங்கிலாந்திலும் இதனை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.குறிப்பாக வலதுசாரி அமைப்புகள் போராட்டம் நடத்தியது.இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.அப்பொழுது போராட்டக்காரர்கள் போலீசாரை தாக்கினார்கள்.இதனால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.இந்த மோதலில் போலீசார்,போராட்டக்காரர்கள் பலர் காயமடைந்தார்கள். மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யபப்ட்டுள்ளனர்.இவர்களிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.