#Breaking: தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது அமைச்சரவைக் கூட்டம் !

Default Image

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு தளர்வு உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தலைமை செயலகத்தில் மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் அந்த கூட்டத்தை தொடர்ந்து, அமைச்சர்களுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தவிருந்தார்.

தற்பொழுது இந்த ஆலோசனை கூட்டமானது, தலைமை செயலகத்தில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு தளர்வு, கொரோனா கட்டுப்பாடு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

மேலும், வருகின்ற 16 மற்றும்  17ஆம் தேதிகளில் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த ஆலோசனை  நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்