இந்தியா – நோபாளம் இடையிலான உறவை எந்த சக்தியாலும் முறிக்க முடியாது- ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

Default Image

இந்தியா – நோபாளம் இடையிலான உறவை எந்த சக்தியாலும் முறிக்க முடியாது என்று  ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் அண்டை நாடாக இருந்து வருகிறது நேபாளம்.இந்த நாடு இந்தியாவுடன்  1800 கி.மீ எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. ஏற்கனவே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் கணக்குபடி லிபுலேக் கணவாயை தங்களது பகுதி என்று அண்மை காலமாக கருத்து கூறிவருகிறது. மேலும், லிம்பியாதுரா, காலாபானி பகுதிகளையும் தங்களது பகுதி என நேபாளம் உரிமை கோரிவருகிறது.இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள லிபுலேக் கணவாய், லிம்பியாதுரா, காலாபானி பகுதிகளை உள்ளடக்கி நேபாளம் கடந்த வாரம் புதிய வரைபடத்தை நேபாளம் வெளியிட்டுள்ளது. இதற்கு நேபாள நாட்டு அமைச்சரவையில் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

எனவே நேபாள அரசின் இந்த போக்கிற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.இதனால் இரு நாடுகளிடையே சற்று பதற்றம் நீடித்தது.இந்நிலையில் இது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,இந்தியா – நோபாளம் இடையிலான உறவை எந்த சக்தியாலும் முறிக்க முடியாது” .”இரு நாடுகள் இடையே பிரச்சினை இருந்தால் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம்” என்று தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்