கர்நாடகாவில் கொரோனா தொற்றுக்கு 23 வயது இளைஞர் பலி.!

Default Image

பெங்களூரை சேர்ந்த 23 வயது இளைஞர் கொரோனா தொற்றுக்கு பலி.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று மட்டும் 308 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ள நிலையில் மொத்த பாதித்தவர்களில் எண்ணிக்கை 6,824 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 464 பேர் குணமடைந்த நிலையில் மொத்தமாக 3,648 பேர் குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.மருத்துவமனையில் 2997  சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கர்நாடகாவில் நேற்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை மொத்தமாக கொரோனாவால் 84 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று பெங்களூரை சேர்ந்த 23 வயது இளைஞர், 62 வயது முதியவர், தார்வாரை சேர்ந்த 70 வயது முதியவர் ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 3,20,922 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,195 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,62,379 ஆகவும் உயர்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்