திருக்குறளை தவிர தமிழக பட்ஜெட்டில் மற்றவை சென்ற ஆண்டுகளின் நகல்!
மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் முதலில் உள்ள திருக்குறளை தவிர, பெரும்பாலும் சென்ற ஆண்டுகளின் நகலாக உள்ளதாக, தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள கமல்ஹாசன், அடுத்தாண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு முதலீட்டாளர்களை அழைப்பதற்கு முன், தமிழ்நாட்டில் தொழில் புரிவோருக்கு ஊழலும், தாமதமும் இன்றி உரிமங்கள் வழங்கட்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
தன் பகுத்தறிவு ஒருபுறம் இருந்தாலும், இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை பற்றி எந்த அறிவிப்பும் இல்லையே ஏன்? என்று கேள்வி எழுப்பியிருக்கும் கமல்ஹாசன், காணாமல் போன ஆயிரம் சிலைகளைப் போல் துறையும் காணாமல் போய்விட்டதா என்றும் வினவியிருக்கிறார்.
ஒவ்வொரு தமிழரும் 45 ஆயிரம் ரூபாய் கடனை சுமப்பதாகவும், எட்டு ஆண்டுகளில் கடனை மும்மடங்காக்கிய ஆள்பவர்க்கு, கண்ணீரில் நனைந்த கண்டனங்கள் என்றும் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.