#BREAKING: ராயபுரத்தில் 5,000-ஐ நெருக்கும் கொரோனா பாதிப்பு.!

Default Image

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4821 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 1,982  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை  40,698  ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று  1,479 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில், அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4821 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தேனம்பேட்டை மண்டலத்தில் 3464 பேருக்கும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 3108 பேருக்கும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 3781 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்