நான் ரெவ்யூ கேட்காவிட்டாலும் மூன்றாவது அம்பயருக்கு விராட் கோலி தொல்லை கொடுப்பார்.!

Default Image

இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  நான் ரெவ்யூ கேட்கா விட்டாலும் மூன்றாவது அம்பயருக்கு கேப்டன் விராட் கோலி தொடர்ந்து ரெவ்யூ கேட்டு தொல்லை கொடுப்பார் என்று பதிவு செய்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருகிறார்கள்.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் தந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடை பெறுமா..? அல்லது நடைபெறாமல் இருக்குமா.? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் போட்டியை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

ஜடேஜா அந்த பதிவில் கேப்டன் விராட் கோலியை பற்றி கூறியுள்ளார், அதில் ஜடேஜா நான் ரெவ்யூ கேட்கா விட்டாலும் மூன்றாவது அம்பயருக்கு கேப்டன் விராட் கோலி தொடர்ந்து ரெவ்யூ கேட்டு தொல்லை கொடுப்பார் என்று பதிவு செய்தார்.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்துள்ள கேப்டன் விராட் கோலி, மூன்றாவது அம்பயரே கூறினாலும், அதிலும் ஜடேஜாவிற்கு தொடர்ந்து சந்தேகம் இருந்துக்கொண்டே இருக்கும் என்று கிண்டலாக பதிலளித்துள்ளார். இந்த பதிவுக்கு  ரசிகர்கள் லைக்குள்கள் அளித்து வருகின்றார்கள். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Dekho bhai meine nai bola hai review lene ko????@virat.kohli #DRS #skipper

A post shared by Ravindra Jadeja (@royalnavghan) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்