35 குழந்தைகளுக்கு கொரோனா.! தமிழக அரசு பதில் தர உச்சநீதிமன்றம் ஆணை.!

தமிழகத்தில் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா பரவுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன..? உச்சநீதிமன்றம் கேள்வி 

நாடு முழுவதும் உள்ள குழந்தை காப்பகங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் கொரோனா தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.இதையடுத்த, தமிழகத்தில் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா பரவுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன..? என கேள்வி எழுப்பி உள்ளது. 

சமீபத்தில் சென்னை ராயபுரம் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா வந்தது இது குறித்து பற்றி தமிழக அரசு பதில்தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதிலும், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில்  ராயபுரத்தில் இதுவரை 4,405 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.