கேரளாவில் மேலும் 65 பேருக்கு கொரோனா.! 57 பேர் வீடு திரும்பினர்.!

Default Image

கேரளாவில் இன்று மட்டுமே புதியதாக 65 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,161ஆக உயர்ந்துள்ளது. 

கேரளாவில் கொரோனா பாதிப்பினை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை கேரள அரசு முன்னெடுத்து வருகிறது. இருந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா தொற்று கேரளாவில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இருந்தாலும், கேரளாவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.

கேரளாவில் இன்று மட்டுமே புதியதாக 65 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில், 59 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2161ஆக உள்ளது. 

இன்று மட்டுமே 57 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரையில் 905 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடுதிரும்பியுள்ளனர். 1238 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒருவர் பலியாகியுள்ளார் இதனால் கேரளாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துளளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்