தொடரும் வங்கி மோசடிகள்!மீண்டும் சிக்கும் முக்கிய புள்ளி …

Default Image

கொல்கத்தாவை சேர்ந்த இருவரை கனரா வங்கி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அமைப்பின் வங்கி பாதுகாப்பு மற்றும் மோசடி பிரிவு அதிகாரிகள்  வங்கிக் கடன் மோசடியின் கீழ் கைது செய்துள்ளது.

ஆர்பி இன்போசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இரு தலைவர்களான ஷிபாஜி பன்ஜா மற்றும் கவுஸ்தவ் ரே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனரா வங்கி மற்றும் இதர 9 வங்கிகளில் ஆர்பி இன்போசிஸ்டம்ர்ஸ் நிறுவனத்தின் இரு தலைவர்கள் போலியான நிறுவன தரவுகளைக் காட்டி சுமார் 515 கோடி ரூபாய் அளவிலான கடனை பெற்று வங்கியை ஏமாற்றியுள்ளனர்.

இந்த மோசடி புகாரில் இந்நிறுவனத்தின் துணை தலைவர்களான விஜய் பாஃப்நா மற்றும் டெப்நாத் பால் ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிடப்பட்டுள்ளது.நீர்வ் மோடி மோசடிக்குப் பின்பு வங்கிகளில் இருக்கும் மோசடிகள் தொடர்ந்து வெளிவருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்