#BREAKING: ராயபுரம் மண்டலத்தில் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று .!

Default Image

ராயபுரத்தில்  இதுவரை 4,023 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2-வது நாளாக நேற்றும் 1500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும்  1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று  1,149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில், அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4,023 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அண்ணாநகர் மண்டலத்தில் இதுவரை 2,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் 3,019 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்