அடுத்த ஆப்பு தினகரனுக்கு ரெடி ?தினகரனின் கட்சிக்கொடிக்கு ஆப்புவைத்த அதிமுக …..

Default Image

அ.தி.மு.க சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரனின் கட்சிக்கொடிக்கு எதிராக  ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் நேற்று(மார்ச்.15) தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியினை மதுரை மேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். அதன்படி கட்சியின் பெயர் “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” என அறிவிக்கப்பட்டது. கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்களும், மத்தியில் ஜெயலலிதாவின் உருவப்படமும் பொருந்திய கட்சியின் கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து தினகரனின் கட்சிக்கொடிக்கு எதிராக அ.தி.மு.க சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் அளித்த மனுவில், “அ.தி.மு.கவின் கொடியின் அமைப்பைப் போன்றே தினகரனின் கொடியின் அமைப்பும் உள்ளது. எனவே தினகரன் கட்சியின் கொடியை உபயோகிக்க தடை விதிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்