#BREAKING: தமிழகத்தில் 31,000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு.!

Default Image

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து 8 வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,156 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 22,149 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 18 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இன்று 604 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 16,999 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று ஒரே நாளில் 16,275 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5,92,970 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மருத்துவமனையில் 14,396 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று பாதிக்கப்பட்ட  1,458 பேரில் 18 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்