காஞ்சிபுரம் அருகே ஹாலோபிளாக் ஆலை உரிமையாளர் கொடூர கொலை!

Default Image

ஹாலோபிளாக் ஆலை உரிமையாளரைக்  காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே கொலை செய்துவிட்டு தப்பிய வடமாநில தொழிலாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டை அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியை சேர்ந்த குப்பன், சாஸ்தரம்பாக்கம் பகுதியில் ஹாலோ ப்ளாக் தொழிற்சாலை நடத்தி வந்தார். அவரது ஆலையில் 10க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

இன்று காலையில் ஆலை வளாகத்தில் குப்பன், கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலிசருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியோடு தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். அதில் குப்பனை அவரது ஆலையில் வேலை பார்த்த வடமாநில தொழிலாளர்கள் கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்