தமிழக அரசாங்கம் இதை உணர்ந்ததா? என்று தெரியவில்லை – மு.க.ஸ்டாலின்

கேரளா, அசாம், ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களை விட, ராயபுரம் என்ற ஒரு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மட்டும் மிக மிக அதிகம்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ்சால் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதுவரை சென்னையில், இந்த கொரோனா வைரசால், 17,609 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 167 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மேற்குவங்கம், உத்திர பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்கள் போன்ற பெரிய மாநிலங்களை விட, சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை அரசு உணர்ந்ததா? என்று தெரியவில்லை.
கேரளா, அசாம், ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களை விட, ராயபுரம் என்ற ஒரு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மட்டும் மிக மிக அதிகம் என்பதையும் தமிழக அரசாங்கம் உணர்ந்ததா? என்று தெரியவில்லை.’ என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025