பிச்சைக்காரன் பட இயக்குநருடன் இணைகிறாரா மக்கள் செல்வன்.!

Default Image

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை பிச்சைக்காரன் படத்தை இயக்கிய சசி இயக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

விஜய் மற்றும் அஜித் இவர்களுக்கு அடுத்த இடத்தில் உயர்ந்து இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற தமிழ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் ‘Uppena’ படத்தில் வில்லனாகவும் நடிக்கவுள்ளார் . மேலும் இவர் காத்து வாக்குல ரண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன், லாபம், இடம் பொருள் ஏவல், கடைசி விவசாயி, கா/பெ ரணாசிங்கம் உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார். அதனையடுத்து இந்தியில் லால் சிங் சத்தா என்ற படத்திலும், மலையாளத்தில் நடிகை மஞ்சு வாரியருடன் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை பிரபல இயக்குநரான சசி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சொல்லாமலே, ரோஜா கூட்டம், பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தை இயக்குகிறார் சசி. அதனையடுத்து விஜய் சேதுபதியை வைத்து படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் லாக்டவுன் முடிந்ததும் அதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்