பஞ்சாபில் ஜூன் 30து வரை ஊரடங்கு தொடரும் ! ஆனால் UNLOCK 1.0 பின்பற்றப்படும்

Default Image

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு ஜூன் 30 ம் தேதி வரை தொடரும் என அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்  அறிவித்துள்ளார். 

பஞ்சாப் மாநிலத்தின் மருத்துவ நிபுணர்கள் குழு ஊரடங்கை தொடர வேண்டும் எனவும் மால்கள் ,திரையரங்குகள் திறந்தால் கடும் விளைவுகளை சந்திக்கக்கூடும் என எச்சரித்தது .இந்நிலையில் ஊரடங்கை அறிவித்துள்ள அம்மாநில முதல்வர் மத்திய அரசு அறிவித்துள்ள 5ம் கட்ட ஊரடங்கின் வழிமுறைகள் அரசு பின்பற்றும் என தெரிவித்துள்ளார் .மத்திய அரசோ இந்த ஊரடங்கை சற்று வித்தியாசமாக அறிவித்துள்ளது .

நேற்று மத்திய அரசு 5ம் கட்ட ஊரடங்குக்கான அறிவிப்பை வெளியிட்டது.இந்த ஊரடங்கு சற்று வித்தியாசமாக UNLOCK 1.0 என்று  ஊரடங்கு தளர்வாக அறிவித்துள்ளது .ஜூன் 1 முதல் 30 ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்றும் ஆனால் 3 கட்டங்களாக ஊரடங்கு தளர்வு இருக்கும் என்று அறிவித்துள்ளது . 

பஞ்சாபில் நேற்று மட்டும்  39  பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது .மேலும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,197 ஐ எட்டியுள்ளது.1967 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 44 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 17042025
sanju samson injury
santhanam and str
BJP Former state leader Annamalai - TN Minister Sekarbabu
edappadi and amit shah Nainar Nagendran
ADMK MP Thambidurai say about ADMK - BJP Alliance
d jeyakumar about bjp