பிரதமர் நரேந்திர மோடி ஆந்திரவை தமிழகத்தை போல் மாற்றுகிறார்!

Default Image

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு , பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறாரோ அதையே ஆந்திர மாநிலத்திலும் செய்ய முயல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறாரோ அதையே ஆந்திர மாநிலத்திலும் செய்ய முயல்வதாகத் தெரிவித்தார்.

மாநிலப் பிரிவினைக்குப் பின் ஆந்திர மாநிலத்துக்கு முறைப்படி என்னென்ன சலுகைகள் வழங்கப்பட வேண்டுமோ அதை வழங்கவே தாங்கள் வலியுறுத்தி வருவதாகச் சந்திர பாபு நாயுடு தெரிவித்தார். ஜெகன்மோகன் ரெட்டியையும், பவன் கல்யாணையும் தனக்கு எதிராகத் திருப்பும் வேலையில் பாஜக ஈடுபடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். நாடு முழுவதும் நரேந்திர மோடிக்கும், பாஜகவுக்கும் எதிரான அலை வீசுவதாகவும், உத்தரப்பிரதேசத்திலும் பீகாரிலும் இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்