தமிழக சட்டப்பேரவை காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்கு மீண்டும் கூடுகிறது!

Default Image

தமிழக சட்டப்பேரவையில் பிற்பகல் 3.30 மணிக்கு காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக  சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதன் பின்னர் பேசிய சபாநாயகர் தனபால், ஆயிரத்து 789 கோடி ரூபாய் செலவில் அத்திக்கடவு அவினாசி திட்ட அறிவிப்புக்கு 4 மாவட்ட மக்கள் சார்பாக நன்றி கூறிக் கொள்வதாக தெரிவித்தார். மாலை 3.30 மணிக்கு மீண்டும் பேரவை கூடும் என்றும் சபாநாயகர் அறிவித்தார்.

மாலை 3.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்