கொரோனா சமூக பரவலாக மாறவில்லை – கேரளா சுகாதார துறை அமைச்சர்!

கொரோனா வைரஸ் கேரளாவில் இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என சுகாதார துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறியுள்ளார். 

உலகம் முழுவதையும் ஆட்டி படைத்தது வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. தற்பொழுது வரை இந்தியாவில் 1.65 லட்சத்தை கடந்துள்ளது கொரோனா பாதிப்பு. இந்நிலையில், கேரளாவிலும் கொரோனா தாக்கம் அதிகம் உள்ளது. 

தற்பொழுது வரை அங்கு பாதிப்பு ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது, உயிரிழப்பு 8 ஆக உள்ளது. இந்நிலையில், அங்கு கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என அம்மாநில சுகாதார துறை அமைச்சர் கே.கே.சைலஜா அவர்கள் கூறியுள்ளார். 

author avatar
Rebekal