பள்ளிகள் திறப்பு எப்போது? முதலமைச்சர் ஆலோசனை.!

Default Image

பள்ளிகளை எப்போது திறப்பது என்பது பற்றி முதல்வர் பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை. 

தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது பற்றி முதல்வர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு மையங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் முதல்வர் ஆலோசித்து வருகிறார். 

இதனிடையே தமிழகத்தில் மே 31 ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதால், மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா மற்றும் 5-ம் கட்ட ஊரடங்கு குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் பொதுமுடக்கத்தை நீடித்தால் என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம் என்றும் முதல்வர் கேட்டறிகிறார். ஏற்கெனவே மருத்துவ குழு பரிந்துரைப்படி, தமிழகத்தில் 4 முறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
adhik ravichandran
dhoni Riyan Parag
Myanmar Earthquake
pm modi MK stalin
CSKvsRR