லடாக் எல்லைப்பகுதியில் படைகளை குவிக்கும் சீனா.! இந்திய எல்லைப்பகுதியில் பதற்றம்.!

Default Image

லடாக் எல்லைப்பகுதியில் சீனா தனது படைகளை குவித்துள்ளதால் இந்தியாவும் அங்கு படைகளை அதிகரித்துள்ளது. 

லடாக்கில் பல்வேறு பகுதியில் எல்லைக்கோடு அருகே தனது பகுதியில் சீனா 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ படைகளை குவித்துள்ளது. அங்கு சீன படைகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லையில் பாங்காங் டிஎஸ்ஓ ஏரி மற்றும் பிங்கர் பகுதியில் சீன படைகள் உள்ளதோடு இந்திய எல்லைப்பகுதிக்கு அருகில் 10 முதல் 15 கிலோ மீட்டர் தொலைவில் அதிநவீன ராணுவ வாகனம் நடமாட்டம் இருப்பதாக இந்திய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், அங்கு சாலை அமைக்கும் பணியிலும் சீனா ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. லடாக்கில் கால்வான் பகுதியில் இந்தியா பாலம் கட்டி வருவதற்கு சீன தரப்பில் கேள்வி எழுபட்டது. இந்த நிலையில், சீனாவின் படை குவிப்பு தீவிரமடைந்து இருப்பதால் இந்திய தரப்பிலும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்