புதிய சாதனை படைத்த மெஸ்சி! செல்சிக்கு அணிக்கு மரண அடி…..

Default Image

பார்சிலோனா , நேற்று நடந்த சாம்பியன்ஸ் கோப்பை ரவுண்ட் ஆப் 16 போட்டியில், செல்சியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

ரவுண்ட் ஆப் சுற்றின் முதல் போட்டியில், செல்சியுடன் 1-1 என டிரா செய்திருந்தது பார்சிலோனா. இரண்டாவது போட்டியில் 0-0 என டிரா செய்தால் போதும் என பார்சிலோனாவும், ஒரு கோலாவது அடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் செல்சியும் மோதின.

போட்டி துவங்கிய, 3வது நிமிடத்திலேயே மெஸ்ஸி சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். பின்னர், 20வது நிமிடத்தில், மெஸ்ஸி 2 வீரர்களை தாண்டி பந்தை எடுத்துச் சென்று பாஸ் செய்ய, அதை இளம் வீரர் டெம்பெலே கோலாக்கி 2-0 என முன்னிலை கொடுத்தார். செல்சி அணி சில வாய்ப்புகளை உருவாக்கினாலும், கோல் அடிக்க முடியவில்லை. 63வது நிமிடத்தின் போது மெஸ்ஸி மீண்டும் 3 பேரை தாண்டி சென்று மற்றொரு கோல் அடித்தார். இது சாம்பியன்ஸ் கோப்பையில் மெஸ்ஸி அடிக்கும் 100வது கோலாகும்.

இரண்டு போட்டிகளையும் சேர்த்து பார்சிலோனா 4-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்