ஒரே நாளில் இந்தியாவில் 1.15 லட்சம் கொரோனா பரிசோதனைகள்

Default Image

ஒரே நாளில் இந்தியாவில் 1.15 லட்சம் கொரோனா பரிசோதனைகள்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து 200-க்கும்  மேற்பட்ட நாடுகளை தாக்கி வருகிறது. இதுவரை இந்த வைரஸால், உலக அளவில், 5,306,235 பேர் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில், 340,047 பேர்  உயிரிழந்துள்ளனர். 

இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆனால் இதுவரை, இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில், 125,149 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,728 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 51,783 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ளனர். 

இந்தியாவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில், மராட்டிய மாநிலம்(41,642) முதலிடத்திலும், தமிழகம் (13,967 ) இரண்டாம் இடத்திலும், குஜராத் (12,905) மூன்றாம் இடத்திலும் உள்ளது. இந்நிலையில், மத்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் படி  சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 28,34,798 ஆகும். மேலும்,  24 மணி நேரத்தில் சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,15,364 ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்