#BREAKING: தமிழ்நாட்டில் ஜூன் 1 முதல் பக்தர்கள் வழிபட அனுமதி.!
தமிழகத்தில் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கோவில்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை இயங்க மத்திய, மாநில அரசு தடை விதித்தது. இதைத்தொடர்ந்து தற்போது நாடுமுழுவதும் 4-ம் கட்ட ஊரடங்கு மே -31-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 40 ஆயிரம் கோவில்களில் பக்தர்களை வழிப்படலாம்.
கோயில்களில் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் கோயில்களில் பக்தர்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.