அலுவலகத்தில் ஒன்றிரண்டு பேர் பாதிக்கப்பட்டால் அலுவலகத்தை மூட வேண்டாம் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

Default Image

ஒரு அலுவலகத்தில் ஒன்றிரண்டு கொரோனா பாதிப்பு இருந்தால் முழுமையாக அலுவலகத்தை மூட வேண்டியதில்லை.

இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியா முழுவதும் தொடர்ந்து 4-வது கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது இந்த ஊரடங்கில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அலுவலகங்களில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், ஒரு அலுவலகத்தில் ஒன்றிரண்டு கொரோனா பாதிப்பு இருந்தால் முழுமையாக அலுவலகத்தை மூட வேண்டியதில்லை என்றும், கிருமிநாசினி தெளித்துவிட்டு பணிகளைத் தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

மேலும், பெரிய அளவில் பாதிப்பு இருந்தால், கிருமிநீக்கம் செய்யப்பட்டு 48 மணி நேரத்திற்கு அலுவலகத்தை மூட வேண்டும். கட்டிடம் போதுமான அளவு கிருமி நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பணியை தொடங்க ஏற்றதாக அறிவிக்கப்படும் வரை, அனைத்து ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊழியர்கள் காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கப்பட்டால் அலுவலகம் செல்லக்கூடாது. உள்ளூர் சுகாதார அதிகாரிகளிடமிருந்து மருத்துவ ஆலோசனை பெறவேண்டும் என்று மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live - 18042025
Shine Tom Chacko
tamilnadu rain
sivakumar about Suriya
TVK Leader Vijay Speech
virender sehwag virat kohli Rajat Patidar
TVK Meeting