குடிநீர் பிடிக்க சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்கள்! சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழப்பு!

Default Image

குடிநீர் பிடிக்க சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்கள்.

இன்றைய சமூகத்தில், பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியான ஒன்றாக தான் உள்ளது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை கிராமத்தில், 13 வயது சிறுமி ஒருவர், குடிநீர் எடுப்பதற்காக சென்றுள்ளார். 

சிறுமி குடிநீர் எடுக்க சென்று நீண்ட நேரமாகியும், வீடு திரும்பாத காரணத்தால், சிறுமியின் பெற்றோர் தேடி சென்றுள்ளனர். குடிநீர் எடுக்க செல்லும் வழியில், சிறுமியை தடி சென்ற போது, சிறுமி, யூக்கலிப்டஸ் காட்டில் மங்கிய நிலையில் கிடந்துள்ளார். 

இதனையடுத்து, இச்சிறுமி  ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஆவர் சிகிச்சை பலனின்றி இன்று (19.05.2020) உயிரிழந்துள்ளார். 

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர், கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். மேலும், சம்பவம் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.வி.அருண்சக்திகுமார் 4 தனிப்படை போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
Nellai Palayamkottai 8th student
MK Stalin
sanjiv goenka rishabh pant
Porkodi Armstrong
Women In Space 2025