BREAKING:+1, +2 வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம்.!

Default Image

+1 வகுப்புக்கு மார்ச் 26-ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஜூன் 16-ம் தேதியும், மார்ச் 24-ம் தேதி தேர்வில் கலந்து கொள்ளாத +2 மாணவர்களுக்கு  ஜூன் 18-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் மீதமுள்ள பிளஸ் 1 தேர்வு நடத்த அரசு திட்டமிட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி வரையும், பிளஸ் +1 பொதுத் தேர்வு ஜூன் 2-ஆம் தேதியும், அதேபோல கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி நடந்த தேர்வை எழுத முடியாமல் போன பிளஸ் +2 மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 6-ம் தேதி நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் கடந்த வாரம் அறிவித்தார்.

இந்நிலையில், கொரோனா ஒரு காலத்தில் பொது தேர்வு நடத்துவதால் மாணவர்களின் மனநலம் பாதிக்கும் என்றும் எனவே தேர்வை ஒத்திவைக்க பல தரப்பினர் கோரிவைத்தனர். இதைதொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்தார். பின்னர் நேற்று தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மாயவன்  பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடைபெறும் என்றும், இதைத்தொடர்ந்து +1 வகுப்புக்கு மார்ச் 26-ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஜூன் 16-ம் தேதி நடத்தப்படும் என்றும் , மார்ச் 24-ம் தேதி தேர்வில் கலந்து கொள்ளாத +2 மாணவர்களுக்கு  ஜூன் 18-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்