மது விற்பனை.! 142 டாஸ்மாக் கடைகளுக்கு 2 மணி நேரம் நீட்டிப்பு.!

Default Image

புதுக்கோட்டை மாவட்டத்தில் 142 டாஸ்மாக் கடைகளில் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், இன்று முதல் இரவு 7 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் 142 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவைகள் அனைத்தும் இன்று முதல் மாலை 5 மணிக்கு பதிலாக இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், டாஸ்மாக் கடைகள் உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என கூறி  மனு தொடரப்பட்டது. அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுபான கடைகளை மூடவும், ஆன்லைன் மூலம் மட்டும் மது விற்பனை செய்யலாம் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

மது கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மது விற்பனைசெய்யப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்