திட்டமிட்டபடி திட்டமிட்ட தேதியில் தேர்வு நடைபெறும் – அமைச்சர் அதிரடி

Default Image

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். பின்னர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, தேர்வு எழுந்தும் மாணவர்கள் அந்தந்த பள்ளியிலேயே தேர்வு நடைபெறும் என்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் உள்ள 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அந்த பகுதியிலேயே தேர்வு மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனா தீவிரம் காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்க வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை வைத்து வந்த நிலையில், 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி திட்டமிட்ட தேதியில் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வு தேதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்