டெல்லியில் மிதமான நிலநடுக்கம்! ஒரே மாதத்தில் நான்காவது முறை நிலநடுக்கம்!

தலைநகர் டெல்லியில் மிதமான நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 2.2 என்று பதிவு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது. இந்த வைரஸால் மாக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், டெல்லியில் நான்காவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அங்குள்ள மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தலைநகர் டெல்லியில், இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மாதத்தில் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது நான்காவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.2 என்று பதிவாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.