பாகிஸ்தானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்தது!

Default Image

பாகிஸ்தானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்தது.

உலக அளவில், இதுவரை 4,429,235 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 298,165 பேர் உயிரிழந்துள்ளனர்.  அமெரிக்காவில் தான் இந்த கொரோனா வைரானால் அதிகமான பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. 

இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக உள்ள நிலையில், இதுவரை இந்த வைரசை அழிப்பதற்கான எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், பாகிஸ்தானில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை இந்த வைரஸ் 7தாக்கத்தால் 761 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8,899 பேர் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்து வீடு திருப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்