‘ஆன்லைன் மது விற்பனை’ கோரிய மனு தள்ளுபடி ! மனுதாரருக்கு ரூ. 20,000 அபராதம் !

Default Image

ஆன்லைன் மது விற்பனை கோரிய மனு தள்ளுபடி. மனுதாரருக்கு ரூ. 20,000 அபராதம். 

ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்தார். இந்த  வழக்கு இன்று நீதிபதிகள் வினித்கோத்தாரி, புஷ்பா சத்யநாரயணா பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் மனுதாரருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை முதலமைச்சர் நிவாரண நிதியில் ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்