15 வயது பெண்ணை ஈவு இரக்கமின்றி தீயிட்டது பெரும் சோகம்! சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும் – நடிகர் விவேக்

Default Image

15 வயது பெண்ணை ஈவு இரக்கமின்றி தீயிட்டது குறித்து ட்வீட்டரில் பதிவிட்ட நடிகர் விவேக்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் மற்றும் முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் என்பவரின் மகளான ஜெயஸ்ரீ என்ற சிறுமியை, சிறுமியை தீவைத்துக் கொளுத்திய கொடூரச் சம்பவம் தமிழகத்தையே பதற வைத்திருக்கிறது.

இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிற நிலையில், நடிகர் விவேக் இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘மனித இனங்கள் ஈரத்துடனும், இரக்கத்துடனும் சக மனிதனை பேண வேண்டிய இத்தருணத்தில், ஒரு 15 வயது பெண்ணை ஈவு இரக்கமின்றி தீயிட்டது பெரும் சோகம். அந்த சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்