குட் நியூஸ் : 47 நாட்களுக்கு பிறகு நகைக்கடைகள் திறப்பு.!

Default Image

தமிழத்தில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக 47 நாட்களுக்கு பிறகு பெரும்பாலான நகைக்கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் 3 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த 3 ஆம் கட்ட ஊரடங்கில் சிவப்பு மண்டலத்தை தவிர மற்ற ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களுக்கு ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வு செய்யப்பட்டது. பின்னர் இந்த ஊரடங்கில் 34 வகையான கடைகள் திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, தமிழத்தில் 47 நாட்களுக்கு பின்னர் பெரும்பாலான நகைக்கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்றி நகை வியாபாரிகள், ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள நகைக்கடைகளில் முதல் கட்டமாக கிருமி நாசினி தெளித்து வர்த்தகத்தை தொடங்கினர். அங்கு மாதச் சீட்டுக்காக பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் குவிந்தனர். இதுகுறித்து நகை வியாபாரிகள் சங்க நிர்வாகி கூறுகையில், குறைவான ஊழியர்களை அமர்த்தியுள்ளோம் என்றும் முகக்கவசம் , சானிடைசர் பயன்படுத்துவது கட்டாயம் என்று கூறியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நகைக்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை தனிமனித இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தி வருகிறோம் என்றும் ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டது. இதனால் எங்கள் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள், வர்த்தகர்கள் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளனர். பின்னர் எங்கள் தொழிலை மீட்டெடுக்க அரசு உதவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
axar patel Ruturaj Gaikwad
myanmar earthquake
rishabh pant sanjiv goenka
mk stalin assembly
rishabh pant lsg
delhi parliament assembly