இந்தியா பங்கெடுக்காவிட்டால் தடுப்பூசி உற்பத்தி செய்ய முடியாது – உலக சுகாதார நிறுவனம்.!

Default Image
தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். இந்தியா பங்கெடுக்காவிட்டால், எல்லோருக்கும் தேவையான தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியாது என உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் தெரிவித்தார்.
 
நேற்று தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி ஆன்லைன் மூலம் மாநாடு நடைபெற்றது. அதில், மத்திய சுகாதாரத்துறை,  மற்றும் மத்திய அமைச்சர் மந்திரி ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இந்த மாநாட்டில் பேசிய, உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானியும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனருமான சவும்யா சுவாமிநாதன் போது, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது  இந்தியாவில் கொரோனா பாதிப்பும் , பலி எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. 
 
நாம் ஓடிக்கொண்டிருப்பது மாரத்தான் என்பது நமக்கு தெரியும். எனவே, எதிர்கொள்ள வரும் மாதங்கள் மட்டுமின்றி, வருடக்கணக்கில் மொத்த உலகமும் தயாராக வேண்டும்.
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியும் பணியில் பல நாடுகள்ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். இந்தியா பங்கெடுக்காவிட்டால், எல்லோருக்கும் தேவையான தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியாது.
 
பொதுவாக தடுப்பூசி கண்டுபிடிக்க 10 ஆண்டுகள் ஆகும். “எபோலா”தடுப்பூசி 5 ஆண்டுகளில்  உருவாக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசியை ஓராண்டு அல்லது அதை விட குறைந்த காலத்தில் உருவாக்குவதுதான் நமது நோக்கம்.
 தடுப்பூசி கண்டுபிடித்ததும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்குத்தான் முதலில் போட வேண்டும்  என கூறினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்